ஐதராபாத்

ஆந்திராவில் டிரைவர் குடிபோதையில் இருந்ததால் பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் பலியானார்கள்.

இன்று அதிகாலை ஐதராபாத்திலிருந்து விசாகபட்டணம் வந்த வால்வோ பஸ் ஒன்று சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. இதையடுத்து பஸ் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பாலங்களுக்கிடையில்  உள்ள கால்வாயில் விழுந்தது. இதனால் பஸ்ஸின் முன்பகுதி நசுங்கி 7 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 30க்கும் அதிகமான பயணிகள் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் டிரைவர் குடிபோதையில் ஓட்டியதால்தான் இந்த விபத்து நடந் த தாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.