ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,052 பேர் கொரோனாவால்  உயிரிழந்து உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 50,776 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  இது வரை 6,72,479 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.