திருமலை: ஆந்திராவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 13 மாவட்டங்களில் ஒரு மாதமாக பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதாலும் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் 6045 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. 64 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட அவர்களில் 31 ஆயிரத்து 763 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
32 ஆயிரத்து 127 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 24 மணி நேரத்தில் 65 பேர் உயிரிழந்தனர்  இதுவரை 823 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். பரிசோதனைகள் அதிகப்படுத்தியதால் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.