பெங்களூரு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரூ ரஸ்ஸல், தான் கடைசி ஓவர்களில் களமிறக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது, 214 என்ற பெரிய இலக்கை விரட்டும் சூழலில், ரஸ்ஸல் களமிறக்கப்பட்டபோது, அணியின் வெற்றிக்கு 49 பந்துகளில் 135 ரன்கள் எடுக்க வேண்டிய மோசமான நிலை இருந்தது.

ஆனாலும், தளராமல் ஆடிய ரஸ்ஸல், வெற்றிக்கு அருகில் அணியை அழைத்து வந்தார். 25 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். ஆனாலும், 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோற்றது.

தொடக்கம் மற்றும் நடு ஓவர்களில், தேவையின்றி பந்துகள் வீணாக்கப்பட்டதே இதற்கு காரணம். 214 என்ற பெரிய இலக்கை விரட்டிய நிலையில், 20 பந்துகளை சந்தித்த ராபின் உத்தப்பா என்ற முக்கிய வீரர், வெறும் 9 ரன்களையே எடுத்தார்.

எனவேதான், அணியின் முடிவு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார் ரஸ்ஸல்.

– மதுரை மாயாண்டி