லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது ‘மாஸ்டர்’ பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தற்போது படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பில் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறார் இசையமைப்பாளர் அனிருத்.
“லாக்டவுனுக்கு 1-2 நாட்கள் முன்னால் தான் அனைத்துப் பாடல்களும் வெளியாகின. அதனால் தான் டிக் டாக்கில் நிறையப் பேர் பாடல்களை வைத்து வீடியோ செய்கின்றனர்.
ஏப்ரல் 9 வெளியீட்டுக்காக வேலை செய்து தயாராக இருந்தோம். இப்போது ஊரடங்கால் எல்லாம் மாறிப்போனது
மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும், அப்படித் திறந்தாலும் கூட எந்த அளவில் மக்கள் அரங்குக்கு வருவார்கள் என்பது நமக்குத் தெரியாது, பயம் இருக்கும்.
படத்தை பற்றி சின்ன அப்டேட் மட்டும் தருகிறேன் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மீண்டும் தொடங்கிவிட்டன. இயக்குநர் லோகேஷும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
என் வீட்டிலேயே இசையமைப்புக்குத் தேவையான கருவிகள் இருப்பதால் நான் பின்னணி இசை வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள். எல்லாம் நன்மைக்கே. படம் என்று வந்தாலும் அன்று சிறப்பாக இருக்கும் என கூறினார் அனிருத் .