நேற்று நடைபெற்ற நாமினேஷன் டாஸ்க்கில் பரஸ்பரம் இருவரும் அடுத்தவரது புகைப்படங்களை தீயில் போட்டு நாமினேட் செய்தனர்.

சுரேஷ் கொளுத்திப்போட்ட குரூப்பிஸம் என்கிற வார்த்தை தான் தற்போது பிக்பாஸ் வீட்டை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. ரியோ, அர்ச்சனா, நிஷா, சோம், வேல்முருகன் ஆகியோர் ஒரு கூட்டணியாக இருப்பதாக தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன.

நேற்று பிக்பாஸ் வீட்டில் நகரம் சார்பாக பேசும்போது கிராமத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என அனிதா சம்பத் கூறினார். அவர் சுரேஷை அதற்கு உதாரணமாக சொல்லி பின்னர் தன்னுடைய வாழ்க்கையையும் தெரிவித்து அந்த பேச்சை முடித்தார். ஆனால் அனிதாவின் பேச்சு சரியில்லை என சுரேஷ் அனைவரிடமும் புலம்பினார் .

இந்த சண்டையில் அனிதா சுரேஷிடம் மன்னிப்பு கேட்க முயன்றும், அவர் பேச மறுத்துவிட்டார்.


இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில், அனிதா கண்ணீர் விட்டு கதறி அழுவதையும், பிக்பாஸ் வீட்டில் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுகிறார்.


இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில், அனிதா கண்ணீர் விட்டு கதறி அழுவதையும், பிக்பாஸ் வீட்டில் தனிமையாக உணர்வதாகவும், தவறுகள் தன் மீது இருப்பதாக நினைப்பதாகவும் கூறி கதறி அழுகிறார்.