டில்லி:

பேரறிஞர் அண்ணாவின் 51வது பிறந்தநாளையொட்டி, டெல்லி  நாடாளுமன்றத்தில் உள்ள அண்ண திருஉருவச் சிலைக்கு வைகோ மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று திராவிடக்கட்சிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி நாடாளுமன்றத்தினுள் அமைந்துள்ள அண்ணாவின்  திருஉருவச் சிலைக்கு  மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ , ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேமூர்த்தி ஆகியோர் வணக்கம் செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அமைந்து உள்ள அண்ணா சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.