டில்லி

லோக்பால் அமைக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே மூன்றே நாட்களில் மூன்று கிலோ எடை குறைந்துள்ளார்.

லோக்பால் என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்கக் கோரி அன்னா ஹசாரே போராடி வருகிறார்.   அவர் தனது கோரிக்கையை வலியுறுத்தி மாநிலங்களிலும் மத்தியிலும் மக்கள் நீதிமன்றம் அமைக்க வேண்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

உண்ணாவிரதம் மேற்கொண்ட மூன்று நாட்களில் அவருடைய உடல் எடை மூன்று கிலோ குறைந்துள்ளதாக அவரது உதவியாளர்கள் கூறி உள்ளனர்.    மேலும் அவருடைய ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து இந்த கோரிக்கைக்காக அன்னா ஹசாரே போராடி வருகிறார்.  ஆனால் இதுவரை அவருடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை,