பெல்லாகவி:

பிரதமர் மோடி பொய் சொல்வதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியிருக்கிறார்.

லோக்பால் மசோதா உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “லோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்றையும் வலியுறுத்தி  ‛‛செய் அல்லது செத்துமடி ” என்பதற்கேற்ப வரும் 23ம் தேதி டெல்லியில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.

மேலும், “பிரதமர் மோடி லோக்பால் மசோதாவை கண்டுகொள்ளவே இல்லை  ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று பொய் கூறிவருகிறார்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், “என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு கெஜ்ரிவாலையும், கிரண்பேடியையும் எனது இயக்கத்தில் சேர்த்ததுதான். அவர்கள் இருவருமே சுயநலவாதிகள்” என்று அதிரடியாக தெரிவித்தார்.