சென்னை: சென்னை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பொதுமக்‍களை மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களையும் தாக்கி வருகிறது. திமுக மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்‍கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கொரோனாவால் பலியானார். அமைச்சர்கள் பலருக்கும் கொரோனா பரவியது. இந் நிலையில், சென்னை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகன், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்‍கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.