சென்னை:  சென்னை அண்ணா சலையில் பள்ளத்தில் சிக்கிய மாநகர பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

சென்னையில் மெட்ரோ பணி நடந்துவரும் பகுதிகளில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுகின்றன. அது போல இன்று அண்ணா சாலை ஜெமினி அருகே ஏற்பட்ட பள்ளத்தில் மாநகரப்பேருந்து ஒன்றும், காரும் சிக்கின.

தீயணைப்பு படை வீரர்கள் கிரேன் மூலம் காரை மீட்டனர். தற்போது பேருந்தும் மீட்கப்ட்டுள்ளது.