சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி . கொரோனா வைரஸ் பிரச்சனையால் தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் துவங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் அண்ணாத்த ஷூட்டிங் துவங்கவிருக்கிறது.
ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ரஜினியும் 10ம் தேதி நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என கூறப்பட்டது .
ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகளை தான் முதலில் படமாக்கவிருப்பதாக சிவா தெரிவித்திருந்தார்.
தற்போது கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், இப்போதைக்குப் படப்பிடிப்பு வேண்டாம் என்று படக்குழு ஒத்திவைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இனி முழுமையாக கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதனால் ‘அண்ணாத்த’ பட வெளியீட்டுத் தேதியிலும் பெரிய மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.