ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், படத்தின் கதைக்கான உரிமையை சுஜாதாவிடமிருந்து தான் வாங்கியதாக ஷங்கருக்கு அந்நியன் கதையில் எந்த உரிமையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு ஷங்கர், படத்தின் கதை, திரைக்கதை என்னுடையது. படத்தின் டைட்டிலிலேயே அப்படித்தான் வருகிறது. சுஜாதா வசனம் மட்டுமே எழுதினார். அதனால் படத்தின் கதை எனக்கே சொந்தம் என கூறினார்

இறுதியில் அந்நியன் கதை ஷங்கருக்கே சொந்தம் என்பது உறுதியானதால் அதன் இந்தி ரீமேக்கிற்கு எந்த தடையுமில்லை.

இந்நிலையில் இந்தப் பிரச்சனையை ரவிச்சந்திரன் தற்போது சௌத்இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்சுக்கு (SICC) கொண்டு சென்றிருக்கிறார். இதில் ரவிச்சந்திரன் உறுப்பினராக உள்ளார். SICC-ன் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இந்தப் பிரச்சனையில் விளக்கம் கேட்டு ஷங்கருக்கு கடிதம் அனுப்பப்படும் என்றார். பொதுவாக ஒரு படத்தின் கதைக்கான உரிமை தயாரிப்பாளரிடம்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ரவி கொட்டாரக்கரா ஓர் மலையாளி. தமிழரல்லாதவர்கள் தான் தமிழ் சினிமாவை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகிறார்கள் என ஒரு கருத்து நிலவுகிறது.