சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 29ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று சபாநாயகர் தலைமையில்  பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இன்று காலை சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தை எதிர்க்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் புறக்கணித்தது.

ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் சபாநாயகர் நடத்திய அலுவலர் ஆய்வுகுழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாளில் எந்தெந்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்து நிகழ்ச்சி நிரல் அறிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மே 29ந்தேதி தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடர் (ஜூலை  6-7-2018 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற நிகழ்ச்சி நிரல்