சென்னை: 18வயது முதல் 45 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதால், தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று மாலை சென்னை வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், அரசு வசம், 5.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இந்த நிலையில்,   இன்று மாலை மும்பையில் இருந்து மேலும் 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வர உள்ளன.

ஏற்கனவே  தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசிடம் முந்தைய அதிமுக அரசு வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.