சென்னை:
சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்நதுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 47,782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 1,10,807 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 2,315 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1,243 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 83,377 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 67,077 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 14,923 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,376 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று மேலும் 19 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேர் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.