மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிலும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம். ஏற்கனவே அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்திருந்தது.
இந் நிலையில் மேலும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,228 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனவால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 2098 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 8,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.