லக்னோ:

உ.பி.யில் 10வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்புர் சம்பவத்தை தொடர்ந்து  அலிகார் மாவட்டத்தில் உள்ள தாப்பல் பகுதியில் 3 வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று இரவு வெயிலுக்கான வீட்டின் வெளியே தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 3 பெண் குழந்தையை தூக்கிச் சென்ற மர்ம நபர் அந்த குழந்தையை கொலை செய்துள்ளார். குழந்தை யின் உடல் சிதைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து குழந்தையின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தாப்பல் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி அப்பகுதியை சேர்ந்த ஜாகீத் மற்றும் அஸ்லாம் ஆகியோரிடம் பத்தாயிரம் ரூபாய் கடனாக பணம் பெற்றுள்ளனர். ஆனால் கடனை குறித்த நேரத்தில் திருப்பி கொடுக்காததால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது.

இதைத்தொடர்ந்தே, அந்த தம்பதியின்  3 வயது மகளை  கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை சேதப்படுத்தி மூட்டையாக கட்டி அங்குள்ள குப்பையில் வீசியுள்ளனர் என்றும், ஆனால் அந்த குழந்தை வன்புணர்வு செய்யப்படவில்லை என்றும், இது தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த கொடூர கொலைக்கு கடும் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும்  டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், டிவிங்கிள் ஷர்மா என கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். இது சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்காகி உள்ளது.