சென்னை:

ளுங்கட்சியான அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக இரண்டாக பிளவு பட்டு உள்ளது.

இந்நிலையில், சசிகலாவின் ஆலோசனையின்படி அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்தனர். அதையடுத்து  எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மேலும் கவர்னரின் உத்தரவுபடி 15 நாட்களுக்குள் சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து நாளை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று சட்டசபை செயலாளர் அறிவித்து உள்ளார்.

எடப்பாடி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 10 நாட்களாகவே கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை எந்த அணிக்கும் தனது ஆதரவு தராமல், தனது சட்டமன்ற அலுவலகத்தில் அமர்ந்து மக்கள் பணியாற்றி வரும்  மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான  நட்ராஜ் ஐபிஎஸ் யாருக்கு ஆதரவு தருவார் என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி எதிராக நட்ராஜ் வாக்களிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், அவர் எதற்கும் பிடிகொடுக்காமல், மக்களின் விருப்பப்படி நாளை சட்டமன்றத்தில் வாக்களிப்பேன் என்று கூறி உள்ளார். இதையடுத்து அவர் ஓபிஎஸ்-சுக்கு வாக்களிப்பது உறுதியாகி உள்ளது.