சென்னை:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை விரைவில் தொடங்கும் என வானி லைமையம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று இன்று மாலை அல்லது இரவில்  மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் வடக்கு மாவட்டங் களான வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டிச்சேரி,கடலூர் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

மழை குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, நாகை, காரைக்கால், திருவாரூர் உள்பட 14 மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.   கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 7 செ.மீ., மழையும், வேலூர் மாவட்டம் கலவையில் 5 செ.மீ., மழையும், திருவண்ணா மலை மாவட்டம் செங்கத்தில் 4 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது, என்று தெரிவித்துள்ளது.