இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விக்ராந்த் இணைந்து நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் ஆனார் ஆன்டனி சேவியர்.

நான் மகான் அல்ல, சிறுத்தை ,மாஸ் பாண்டியநாடு, அயோக்கியா ,சக்கரா , ஈஸ்வரன் போன்ற பல வெற்றி திரைப்படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றியவர்

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக குடும்பத்தோடு சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்ற அந்தோணி சேவியர்க்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று காலை 11 மணி அளவில் உயிரிழந்துள்ளார் .

ஆண்டனி சேவியரின் இறுதி சடங்குகள் இன்று மதுரையில் நடந்துள்ளது . 51 வயதான ஆன்டனி சேவியரின் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.