இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் இவர்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளனர்.

இந்த நிலையில், தங்களது குடும்பத்தில் மூன்றாவதாக ஒருவர் வருவதை விராட் கோலி தெரிவித்துள்ளார். ஜனவரி 2021-ல் அனுஷ்கா சர்மா குழந்தையை பிரசவிக்க இருப்பதை கோலி வெளிப்படுத்தியுள்ளார்.

“இனி நாங்கள் மூன்று பேர்! ஜனவரி 2021 க்கு வருகிறது” என்று அனுஷ்கா தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ட்வீட் செய்துள்ளார் .