செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , அனுஸ்கா ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் தான் அதில் நடிக்க போவதாக பெருமையுடன் கூறினார்.

பூங்குழலி கதாபாத்திரத்திற்காக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது படக்குழு அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அனுஷ்கா குந்தவி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களுடன் வைரலாகி வருகிறது .

Courtesy : Anushka Shetty Fans Club