சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ பி சாஹி நியமிக்கப் பட்டுள்ள நிலையில் வரும்  11-ஆம் தேதி அவர் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி பணியிடம் கடந்த ஒரு மாதமாக காலியாகவே உள்ளது. இந்த நிலையில், பாட்னா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹியை (Amreshwar Pratap Sahi) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  உச்சநீதி மன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

அதை ஏற்ற மத்தியஅரசு, குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அதற்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர் ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக பணி நியமனம் செய்தும், வரும்  13-ம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி, அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி (Amreshwar Pratap Sahi) எனப்படும் ஏ.பி.சாஹி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக  வரும் 11ந்தேதி பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.