சென்னை:

ப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு திடீரென உடல்நலைக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர் சென்னையில் உள்ள  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நேற்று நள்ளிரவு அவருக்க  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக  மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு,  முதற்கட்டமாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும்,  அவர் தொடர்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜெ. சிகிச்சை பெற்ற அறையில் கண்காணிப்பு காமிரா செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.