சென்னை,

மிழகத்தில் செல்போனில் மின்கட்டணம் செலுத்த வசதியாக புதிய ஆப்-ஐ தமிழக மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது மின் கட்டணத்தை பெரும்பாலோனோர் மின் வாரியம் சென்றே செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே ஆன்லைன் மூலம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது அனைவரிடம் ஸ்மார் போன்கள் புழங்கி வருவதால், பெரும்பாலான சேவைகள் அனைத்தும், அதற்கான ஆப் (app) மூலமே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக மின்சார வாரியமும், புதிதாக செல்போன் ‘ஆப்’ (கைபேசி செயலி) மூலம் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

செல்போனில் கூகுள் பிளே-ஸ்டோருக்கு சென்று tangedco app, என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதன்மூலம் எளிதாக மின்கட்டணம் செலுத்தலாம். தாங்கள் செலுத்திய மின்கட்டணம், எஸ்.எம்.எஸ். மூலம் உறுதிப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தை தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கிவைத்தார்.