சென்னை:
மிழகஅரசால் வழங்கப்படும் பெண்கள் முன்னேற்றத்திற்கான சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 20ந்தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறந்த சமூக சேவை செய்த தனிநபா் மற்றும் நிறுவனங்களுக்கான விருதைப் பெற ஜூலை 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தமிழக சமூக நலத்துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

2020-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது (ஆகஸ்டு 15)  பெண்களின் முன்னேற்றத்துக்குச் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளன.

இந்த விருதுகளை பெறுவதற்கு,  குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்குப் பெருமை சோக்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மகளிா் நலனுக்குத் தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா் மற்றும் நிறுவனங்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்த விருதுக்கு பங்கு பெற விரும்பும் நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

தனிநபரை பொருத்தவரை தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வரப் பெற வேண்டும்.மாநில அளவிலான உயா் மட்டக்குழு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, விருதுக்குத் தகுதியான தனிநபா் மற்றும் நிறுவனத்தைத் தோந்தெடுக்கும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, அளவு புகைப்படத்துடன் பெறப்பட வேண்டும்.

எனவே, அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்துக்குச் சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டச் சமூக நல அலுவலரை நேரில் அணுகி, வருகின்ற ஜூலை 20-ஆம் தேதிக்குள் கருத்துருக்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.