இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட்டும் சேர்ந்து ‘1947’ என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்தத் திரைப்படம் தேசிய அளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தை பொன் குமரன் இயக்குகிறார். கன்னடத்தின் படங்களை இயக்கி வரும் பொன் குமரன், தமிழில் ‘சாருலதா’ படத்தை இயக்கியிருந்தார். மேலும் ரஜினிகாந்த நடிப்பில் உருவான ‘லிங்கா’ திரைப்படத்துக்கு கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார்.