‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் ஏ.ஆர்.முருகதாஸே இயக்க போவதாக பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டுள்ளது.

ரஜினி – ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் பட்சத்தில் அந்தப் படத்தையும் நாங்களே தயாரிக்கிறோம் என்று லைகா நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் ஒப்பந்தத்தில் முடிவடையும் என்று படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.