‘ஒத்த செருப்பு’ படத்துக்குப் பிறகு ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார் பார்த்திபன்.

ஒரே ஷாட்டில் முழுப் படத்தையும் எடுக்கவுள்ள அந்த படத்திற்கு ‘இரவின் நிழல்’ எனப் பெயரிட்டு, படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இரவின் நிழல் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் இதை உறுதி செய்துள்ளார். அவர் பேசியதை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பார்த்திபன், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது. ஆம் இரவின் நிழல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றுகிறார். அருமையில் – 3 பாடல்கள் கைவசம் அருகாமையில் இன்னொன்று ப்ரமோஷன் பாடல். மிகவும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.