கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்தார் கெளதம் மேனன்.
தற்போது ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2’ படத்திலிருந்து ஒரு பகுதியை எடுத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.
கெளதம் மேனன் வேண்டுகோளை ஏற்று படத்துக்கு எந்தளவுக்கு உழைப்பாரோ அதே அளவுக்கு உழைப்பை இந்த குறும்படத்துக்கு கொடுத்து பின்னணி இசையமைத்துக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தக் குறும்படம் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.