சென்னை:
“தனது தொழில்நுட்பத்தை திருடிவிட்டார் ஏ.ஆர் ரஹ்மான், என பிரபல கின்னஸ் சாதனை இயக்குநர் பாபுகணேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை புரிந்தவர் இயக்குனர் பாபு கணேஷ்.  நடிகை என்ற படத்திற்காக படத்தயாரிப்பில் மொத்தமுள்ள 14 பொறுப்புகளை ஏற்று அந்த படத்தை உருவாக்கியதால் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாக சொல்லப்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக  அந்த படம் வெளிவரவில்லை.
தமிழில் நடிகை, தேசிய பறவை, நாகலிங்கம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து கடல்புறா திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் வாசனை படம் படைத்த பெருமைக்குரிய வராக புகழ் பெற்றார் இயக்குனர் பாபு கணேஷ்.
கடல்புறா படம் படம்  தியேட்டர்களில் திரையிடும்போது,  உலகிலேயே முதன்முறையாக திரையரங்கு களில் வாசனை  முறையை அறிமுகப்படுத்தி புகழ் பெற்றவர். தற்போது இயக்கிவரும் (2018ம் ஆண்டு முதல்)   காட்டுப்புறா படத்தினையும் இதே முறையில் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  தற்போது இயக்குனராகவும், கதையாசிரிய ராகவும் அவதாரம் எடுத்து, இயக்கி வரும   லீ மஸ்க் (‘Le musk’) திரைப்படத்தில், கடல்புறா படத்தில் அறிமுகப்படுத்தப்பட்  வாசனை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.
லீ மஸ்க் திரைப்படம் தொடர்பான விளம்பரத்தில், படம் திரையிடும்போது வெளியாகும்,  வாசனை உக்தியை  உலகிலேயே முதன்முறையாக தான்  பயன்படுத்துவதாக கூறியிருப்பதாக தெரிகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் பாபுகணேஷ், தனது தொழில் நுட்பத்தை ரஹ்மான் திருடி விட்டார் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தை தான், 200ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், அது  உலக அதிசயமாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளவர்,  தனது வாசனை தொழில்நுட்பம், ஆசியன் புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் ஆகிய சாதனைகளையும் படைத்துள்ளது என்று தெளிவு படுத்தி உள்ளார்.

தனது, இந்த கான்செப்ட்டை வைத்துதான் இசைமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கிலப் படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்.  எனது தொழில்நுட்பத்தைப் அவர் பயன்படுத்தி இருப்பது  பெருமை தான். ஆனால், உலகத்திலேயே முதன்முறையாக நான்தான் பண்ணேன் என்று கூறுவது என்னுடைய உழைப்பை எடுத்துக்கொண்டதாகத்தான் அர்த்தம் என்று குற்றம் சாட்டினார்.
அவருடைய உழைப்பை யாரும் எடுத்துக்கொண்டால், அவரது மும்பை டீமை வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து அதற்கான பணமும் வசூலித்து வருகிறார். ஆனால், எனது தொழில்நுட்பத்தை அவர் எப்படி எனது அனுமதி இல்லாமல் உபயோகப்படுத்த முடியும்.
தான் தற்போது மூன்று மொழிகளில் தயாரித்து வரும்  காட்டுப்புறா படத்தில் மீண்டும் வாசனை தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறேன். இதை  நம்பித்தான் எனக்கு பைனான்சியர்கள் பணம் கொடுத்துள்ளார்கள்.
இதுபோன்ற ஒரு சூழலில், தனது தொழில்நுட்பம் குறித்த ஏ.ஆர் ரஹ்மான் என்னிடம் பேசியிருக்க லாம் என்று வருத்தப்பட்டவர், தனது  கான்செப்ட் திருட்டு குறித்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.