கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மதிக்காத தம்பி ஒருவர், காவல்துறையினரிடம்  CM- யை என் ஊருக்கு வந்து கொரோனாவை கண்ணுல காட்ட சொலுங்க  என்று அலப்பறை செய்த செய்த காட்சியும்.. பின்னர் அவரை போலீசார் தரமாக கவனிக்கும் காட்சியும் உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பதற்றத்துக்குள்ளாக்கி உள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுஉள்ளது. மார்ச் 14ந்தேதி வரை ஊரடங்கு உள்ள நிலையில், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், பலர் சட்டத்தை மதிக்காமலும், காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்காமலும் சுற்றி வருகின்றனர்.. இதுபோன்று, திருச்சி அருகே உள்ள அறந்தாங்கியில்  சுற்றித்திரிந்த இளைஞரை மடக்கிய காவல்துறையினர், அவரை வீட்டுக்குச் சென்று அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆனால், ஏற்க மறுத்த அந்த தம்பி,  ” கொரோனான்னு எதுமே இல்லை… இது என்னோட கோட்டை… சிஎம்ஐ என் கோட்டைக்கு வந்து கொரோனாவை என் கண்ணுல காட்ட சொல்லுங்க… என்று கையை நீட்டி ஆவேசமாக காவல்துறை அதிகாரிகளிடம் மிரட்டல் விடுக்கும் தொனியில் சவாடலாக பேசினார்…

இதனால் பொறுமையிழந்த காவல்துறையினர், அந்த தம்பியை குண்டுகட்டாக தூக்கிச்சென்று காவல்நிலையத்தில் வைத்து, மூட்டி போட வைத்து  செமத்தையாகவும், தரமாகவும் கவனித்தனர்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது…

சட்டத்தை மதிக்காத இதுபோன்ற நபர்களுக்கு இதுதான் சரியான தண்டனை…