சென்னை:

சென்னையின் பல பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், அனுமதியின்றி வைக்கப்படும் பேனர் குறித்து புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.

அதன்படி,  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் குறித்து  மண்டலம் 1 முதல் 5 வரை உள்ள பொதுமக்கள்  9445190205 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல  மண்டலம் 6 முதல் 10 வரை உள்ள பகுதிகளில் வைக்கப்படும் பேனர்கள் குறித்து 9445190698 என்ற எண்ணுக்கும், 

 மண்டலம் 11 முதல்15 வரை  உள்ள பகுதி மக்கள்  9445194802 என்ற எண்ணுக்கும் புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்து உள்ளது.

தொலைபேசி எண்கள் எல்லாம் சரிதான்… ஆனால், சட்டவிரோத பேனர்  தொடர்பாக புகார் அளிப்பவர்கள் குறித்து பேனர் வைப்பவர்களிடம் அதிகாரிகள் மாட்டி விடாமல் இருந்தால் சரி…. அதிகாரிகள் யாருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை விரைவில் நாம் காணலாம்….