டில்லி:

ஃபேல் போர் விமான ஒப்பந்தம்  தொடர்பான மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையிட்டு வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு  முன்பு உச்ச நீதி மன்றத்தில் கடந்த 6ந்தேதி முதல்  விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்  ரஃபேல் ஒப்பந்தம்  தொடர்பான  ஆதாரங்கள் பத்திரிகைகளில் வெளியான நிலையில்,  ரஃபேல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, ரஃபேல் ஆவணங்கள் திருட்டு போனதாக உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு குற்றம்சாட்டியது. ஆவனங்களை வெளி யிட்ட இந்து பத்திரிகை மீதும் அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படும் என மிரட்டியது. அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் மித்ரா தாக்கல் செய்த மனுவில்,  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  மனுதாரர்கள் தாக்கல் செய்திருப்பது,  தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கின் இன்றைய விவாதங்கள் பரபரப்பாக நடைபெற்றது. னுதாரர் பிரசாந்த் பூஷன், ரஃபேலில் வெளியான ஆவணங்கள் எல்லாம் தற்போது பொதுவில் இருக்கிறது. மக்கள் எல்லோரும் இந்த ஆவணங்களை பார்த்துவிட்டார்கள். மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். அதனால் ரஃபேல் ஆவணங்களை நீதிமன்றம் விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று வாதாடினார்.

மேலும்,  ரஃபேல் ஆவணங்களை திருடினார்கள் என்றால் அதுகுறித்து  புகார் அளித்து இருக்கலாமே? என்றவர், அரசுக்கு தேசிய பாதுகாப்பு முக்கியம் இல்லை. அரசு சில முக்கியஸ் தர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று கடுமையாக சாடினார்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

தொடர்ந்து நடைபெற்ற வாதத்தை தொடர்ந்து, 2ஜி வழக்கில் கசிந்த ஆதாரங்களை நீதிமன்றம் விசாரித்தது.. அதுபோல ரஃபேல் வழக்கிலும் கசிந்து இருக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். என்றவர்,  இதை தாராளமாக நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றவர், வியட் நாம் போர்  குறித்த ராணுவ ரகசியங்களை அமெரிக்க நீதிமன்றம் விசாரித்தது. பென்டகன் பேப்பர் வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் ராணுவ ரகசியங்கள் விசாரித்தது. அதேபோல் இந்திய உச்ச நீதிமன்றமும் ராணுவ ரகசியமாக இருந்தாலும் விசாரிக்க வேண்டும். இரண்டு வழக்கும் ஒரே மாதிரியான வழக்குதான் என்று தனது வாதத்தை முடித்தார்.

அதையடுத்து மத்தியஅரசு சார்பாக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்  வாதாடினார். அப்போது, ம ரஃபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த சி.ஏ.ஜி. அறிக்கையில் முதல் மூன்று பக்கங்கள் விடுபட்டு இருப்பதாக தெரிவித்தார். அவற்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

ரஃபேல்  விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு  பெற கூடியவை அல்ல என்று அவர் கூறினார். மனுதாரர்கள், சீராய்வு மனுவுடன் தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.