ங்லிஷ் விங்லிஷ் படத்தில் ஸ்ரீதேவி டன் நடித்தவர் பிரியா ஆனந்த். பின்னர் அரிமா நம்பி, இரும்பு குதிரை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
பிரியா ஆனந்துக்கு பிறந்த நாளை யொட்டி அவருக்கு பலர் வாழ்த்து கூறினார்கள். பின்னர் அவர் கூறியதாவது:


என்னை அறிந்தவர்களுக்கு நான் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லை என்பது தெரியும். பல ஆண்டுகளாக வாழ்க்கை எனக்குக் கொடுத்த மற்றும் கற்பித்த எல்லாவற்றிற்கும் நன்றியுள்ள வனாக உணர்கிறேன். குறிப்பாக கோவிட் -19 பரவலில் மக்களிடம் நிறைய மாற்றங்கள் உணர்கிறேன். கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டிலும் என் முழு வெளிப்பாட்டை யும், சுய குணத்தையும் வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன்.
மன்னிப்பு கேட்காத ஒருவரை மன்னிப் பதே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய கடினமான காரியங் கள் என்பதை நான் அறிந்தேன். நீங்கள் தனித்துவமாக வைத்திருக்கும் உங்கள் மதிப்புகளை அப்படியே பின்பற்றுங் கள். மறைக்கப்பட்ட புதையல் போல உங்கள் இதயத்தில் நீங்கள் கொண்டு செல்லும் உண்மையைச் சொல்ல பயப்பட வேண்டாம்.


‘நானே’ என்ற கவிதையின் ஒரு பகுதி, என் தாயிடமிருந்து நான் கற்று க்கொண்ட பல அற்புதமான விஷயங் களில் ஒன்றை நினைவூட்டுகிறது, அது இன்று நான் யார் என்பதை வடிவமைத் துள்ளது.
என்னிடமிருந்து என்னை மறைக்க முடியாது; மற்றவர்கள் ஒருபோதும் என்னிடன் பார்க்க முடியாததை என்னால் பார்க்க முடியும்; மற்றவர் களுக்கு ஒருபோதும் தெரியாததை நான் அறிவேன், என்னை நானே முட்டாளாக்க முடியாது.
இன்று எனக்கு வாழ்த்து சொன்ன உங்கள் அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு பிரியா ஆனந்த் கூறி உள்ளார்.