டிகர் ஆர்யா, இந்துஜா நடித்த படம் ’மகாமுனி’. சாந்தகுமார் இயக்கினார்.இப் படத்தை தயாரித்த கே.ஈ.ஞனவேல்ராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கொரானா வைரஸ்‌ தாக்கத்தால்‌ பொது மக்களும்‌, திரைத்துறையினரும்‌ மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் என்னைப்பற்றி அவதூறாக வரும் செய்தி களில்‌ எள்‌ முனையளவும்‌ உண்மை யில்லை என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்‌.

தமிழ்த்‌ திரையுலகிற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளையும்‌, பல திறமை யான நடிகர்களையும்‌, தந்துள்ள எனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம்
தயாரிக்கப்பட்ட மகாமுனி (ஆர்யா நடித்தது) திரைப்படம்‌ 2019-ம்‌ ஆண்டு செப்டம்பர்‌ மாதம்‌ 06-ம்‌ தேதி ரிலீஸ்‌ ஆனது. நீதிமணி என்பவர்‌ 2019-மே மாதம்‌ என்னை அணுகி ‘மகாமுனி: திரைப்படத் தின்‌ தமிழ்நாடு ஏரியா விநியோக உரிமை தனக்கு வேண்டும்‌ என்று கோரினார்‌. அவ்வகையில்‌ 2019-மே 27ம்‌ தேதி:
ரூ.6,25,00,000 (ஆறுகோடியே இருபத் தைந்து இலட்சம்‌ ரூபாய்‌) தொகைக்கு நீதிமணியின்‌ தருண் பிக்சர்ஸ் நிறுவனத் திற்கு மகாமுனி திரைப்படத்‌துக்கு முறையான ஒப்பந்தம் போடப்பட்டது. நீதிமணி‌ பகுதி தொகையாக ரூ.2,30,00,000 (இரண்டு கோடியே முப்பது இலட்சம்‌ மட்டுமே) செலுத்தினார்‌. மீதமுள்ள ரூ.3,95,00,000 (மூன்று கோடியே தொன் னுற்று ஐந்து இலட்சம்‌) தொகையை பிறகு தருவதாக சொன்னவர்‌ இன்றுவரை தராமல்‌ என்னை ஏமாற்றிவிட்டார்‌. மீதமுள்ள தொகையை தரவேண்டி நீதிமணி மீது சினிமா துறையின்‌ சட்டதிட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்‌ நீதிமணியும்‌ அவரின்‌ கூட்டாளிகளும்‌ ரூ.3,00,00,000 மூன்று கோடி மோசடி செய்துவிட்டதாக துளசி மணிகண்டன்‌ என்பவர்‌ ஒரு புகார்‌ அளித்துள்ளார்‌. என்‌ மீதோ, ஸ்டூடியோ கிரீன்‌ நிறுவனம்‌ மீதோ எவ்வித புகாரும்‌ அளிக்கப்படவில்லை. ஒரு பொருளை வர்த்தகம்‌ செய்யும்‌போது அதை சட்டப் படியான வியாபாரத்தை மட்டுமே பேச முடியும்‌. அவ்வகையில்‌ “மகாமுனி: திரைப்படத்தை சட்டப்படியாக; முறை யாக விற்பனை செய்ததைத்‌ தவிர எனக்கும்‌ நீதிமணிக்கும்‌ எவ்வித தொடர்பும்‌ இல்லை. நீதிமணி‌ மீது துளசி மணிகண்டன்‌ அளித்துள்ள புகாரில்‌ எவ்வித முகாந்திரமும்‌ இல்லாமல்‌ என்னையும்‌, ஸ்டுடியோ கிரீன்‌ நிறுவனத்தையும்‌ இணைத்து, என்‌ புகைப்படத்தையும்‌ பயன்படுத்தி நான்‌ நிதி மோசடி செய்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி 300-கோடி ரூபாய்‌ மோசடி என என்னிடம்‌ எவ்வித விளக் கமும்‌ கேட்காமல்‌; தன்னிச்சையாகவும்‌, தனிமனித சுதந்திரத்திற்கு ஆபத்து விளை விக்கும்‌ வகையிலும்‌ வெளியிடப் பட்டுள்ள‌ செய்திகளைப்‌ பார்த்து நானும்‌, என்‌ குடும்பத்தினரும்‌. மிகுந்த மனவேத னைக்கு உள்ளாகியுள்ளோம்‌.
இது போன்ற செய்திகள்‌ திரைத்துறையில்‌ நான் சம்பாதித்து வைத்திருக்கும்‌ நற்பெய ருக்கு ஊறு விளைப்பதோடு எனது எதிர் கால வியாபாரத்திலும்‌ எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்‌. ஆபத்துகள்‌ உள்ளன. எனவே, இதுபோன்ற செய்தி களை என்‌ அனுமதி பெறாமலும்‌, உண்மைக்குப்‌ புறம்பாகவும்‌ யாரும்‌ வெளியிட வேண்டாம்‌ என தாழ்மையுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌ இதுபோன்ற செய்திகள்‌ வெளியிடுவது தொடர்ந்தால்‌ அந்த செய்தியை வெளி யிடுவோர்‌ மீது சிவில்‌ மற்றும்‌ கீரிமினல்‌ வழக்கு தொடர்வதோடு மான நஷ்டஈடு வழக்கும்‌. தொடரப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
இவ்வாறு கே.ஈ.ஞானவேல் ராஜா அறிக்கையில் கூறி உள்ளார்.