சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் 2021 ஏலத்தில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் பெரிய திறமைகள் எதுவுமின்றி, சச்சினின் மகன் என்ற காரணத்தால், கிரிக்கெட் உலகில் வளைய வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். இந்நிலையில், நீண்ட காத்திருப்பிற்கு பிறகு, ஐபிஎல் ஏலத்தில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்று, மும்பை அணியால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக, விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார் சச்சின். அதாவது, அப்போராட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்த அமெரிக்க பிரபலத்தை சாடினார் சச்சின் டெண்டுல்கர். அவரின் இந்தக் கருத்து மக்கள் நலன் சார்ந்த பலரிடமிருந்து கடும் கண்டனத்தைப் பெற்றது.

தன் மகனை எப்படியாவது ஐபிஎல் ஏலத்தில் நுழைத்துவிட வேண்டுமென்ற ஆசையில்தான், சச்சின் இப்படி விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறார் என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

தற்போது, கார்ப்பரேட் விவசாயத்தில் ஈடுபடலாம் என்று பெரிதாக எதிர்பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர்!

இதனால், இதற்கும், அன்று சச்சின் தெரிவித்த கருத்துக்கும் ஏதும் தொடர்பிருக்குமா? என்று பெரியளவில் புருவத்தை உயர்த்துகின்றனர் பலர்!