மும்பை: டி-20 மும்பை லீக் போட்டிகளுக்காக, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ரூ.5 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

தீவிரமான ஏல செயல்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆகாஷ் டைகர் மும்பை மேற்கு புறநகர் அணியால், இரண்டாவது சீசன் போட்டிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் அர்ஜுன்.

இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் வளர்ந்துவரும் அர்ஜுன் டெண்டுல்கர், ஆல்-ரவுண்டர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இவருக்கான அடிப்படை விலை ரூ.1 லட்சம் என்பதாக இருந்தது.

பல அணிகள் இவரை ஏலம் எடுக்க முயன்றாலும், வடக்கு மும்பை பேந்தர்ஸ் அணிதான் இவரின் விலையை ரூ.5 லட்சம் என்பதாக ஏற்றிவிட்டது.

ஆனால், இறுதியில் ஆகாஷ் டைகர் மும்பை மேற்கு புறநகர் அணிதான் இவரை எடுத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றது.