சென்னை: சென்னையில் ஆயுதப்படை காவலர் ஒருவர் தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆயுதப்படைக் காவலர் சுரேஷ் என்பவர் தங்கியிருந்தார்.  சுரேஷ் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. விடுதியில் இருந்து பணிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், அவர் விடுதியில்   விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த  சம்பவம் பெரியமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து காவலர் சுரேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வேலை பளு காரணமாக சுரேஷ் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமாக என்பது குறித்து, சுரேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.