கண்ணூர்,

ராணுவத்தினர் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கண்ணூர் அருகே நடைபெற்ற  பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாலகிருஷ்ணன், ராணுவத்துக்கு அதிகபட்ச அதிகாரங்களை அளித்தால்,  அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைக் கடத்தி ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்வர். ராணுவத்துக்கான அதிகாரம் கட்ட விழ்த்துவிடப்பட்டுள்ள நாடுகளில் இதுதான் நடைபெறுகிறது.

ராணுவம் கண்ணூருக்கு வந்தால், பொதுமக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல்தான் வெடிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்தில் பேசிய மத்தியஅமைச்சர் அருண்ஜேட்லி,  போர் போன்ற சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் ராணுவத்துக்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய கொடியேறி பாலகிருஷ்ணன், ராணுவத்தினர் பெண்களை பலாத்காரம் செய்வர் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.