மும்பை: இந்திய ராணுவத்தினருடைய குழு காப்பீட்டு நிதி, உள்கட்டமைப்பு குத்தகை & நிதி சேவைகள் (IL & FS) பத்திரங்களில் போடப்பட்டு, ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு நிதியின் மொத்தத் தொகை கிட்டத்தட்ட ரூ.210 கோடி என்று கூறப்படுகிறது. தளபதிகள் தொடங்கி, சாதாரண வீரர்கள் வரையிலான அனைவரின் பணமும் இத்தொகையில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள், (IL & FS) புதிய வாரியத்தை அணுகி, அந்த நிதியை ஆபத்திலிருந்து மீட்பது குறித்துப் பேசினர். ஆனால், எந்த முறைான பதிலும் அப்போது கிடைக்கவில்லையாம்.

பத்திரிகையாளர்கள் தரப்பில் (IL & FS) வாரியத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதேபோன்று, ராணுவத் தரப்பில் கேட்கப்பட்டபோதும் பதில் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

– மதுரை மாயாண்டி