ஐதராபாத்

ஹிராகன்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது போல அண்மையில் கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் குறைந்தது நான்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. சில வாரங்களுக்கு முன்பு, தென் மத்திய ரெயில்வேயின் காசிபேட்-பலார்ஷா பிரிவில் உள்ள விஹிர்கான் ரயில் நிலையத்தில் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு, முக்கியமான வழியில் ரயில் இயக்கத்தில் பெரும் இடையூறை ஏற்படுத்தியது.

கடந்த ஆறு மாதங்களில் ஐந்தாவதாக நடந்துள்ள சனிக்கிழமை ரயில் விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் சோதனை செய்யும்போது, பாதுகாப்பு அதிகாரிகளின் வெற்றிடங்களின் எண்ணிக்கை, புறக்கணிப்பு மற்றும் அக்கறையின்மை தான் காரணம் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. கிழக்கு ரயில்வே பதிவுகளின் படி, விபத்து ஏற்பட்ட கிழக்கு ரயில்வே துறையில், பாதுகாப்பு அதிகாரி இடங்களுக்கு 24% காலியிடம் உள்ளது.
இதற்கிடையில், இந்தியா முழுவதும் 1.42 லட்சம் பாதுகாப்பு ஊழியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது கவலைக்கிடமான விஷயம் என்றும் உத்தியோகபூர்வ அக்கறையின்மை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
“அதிக அளவில் காலியிடங்கள் இருப்பது மட்டுமல்லாது அங்கிருக்கும் ஊழியர்கள் துணை-நிலையான நிலைமைகளின் பணி புரிகின்றனர். மேலிடத்தில் உள்ள அமைச்சர்கள் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு முன் தொழில்நுட்பத்தின் உதவிக்காகக் காத்திருந்தாலும், முன்னதாக சோதனை செய்த தானியங்கி மோதல்- எதிர்ப்புச் சாதனம் நம்பிக்கைக்குரியதாகத் தெரியவில்லை. காலியாக இருக்கும் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்,” என்று எஸ்சிஆர் லிருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு கடற்கரை ரயில்வேயில் ஒப்புதல் கொடுக்கப்பட்ட 6,398 பொறியியல் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு எதிராக, வெறும் 4,827 இடங்கள் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள 1,571 இடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே வாரிய விவரங்கள் படி, பாதுகாப்பில் 67 பணியிடங்கள், சிக்னலில் மற்றும் தொலைத்தொடர்பில் 93, மற்றும் இயங்கும் சோதனை மின் வண்டியில் 613 பணியிடங்கள் காலியாக உள்ளன. “முக்கியமான பதவிகளில் இவ்வளவு அதிகளவிலான காலியிடங்கள் இருந்தால் விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன”, என்று எஸ்சிஆர் மஸ்தூர் யூனியன், பிரிவுச் செயலாளர், கே . சிவக்குமார் கூறினார்.