சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை 5 மணிக்கு  தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த சந்திப்பின்போது, தமிழக கொரோனா நிலவரம், புதிய கல்விக்கொள்கை, அரியர்ஸ் விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.

தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்,குடியரசுத் தலைவருடன்  புதிய கல்விக்கொள்கை தொடர்பான நேற்றைய மாநாட்டில்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டார்.

இந்தநிலையில் முதல்வர் பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றம்,   14ம் தேதி சட்டப்பேரவை  கூட்டம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.