சென்னை,

பெரா வழக்கில் ஆஜராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் உறவினருமான சுதாகரனுக்கு எழும்பூர் கோர்ட்டு பிடிவாரன்டு பிறப்பித்து உள்ளது.

சுதாகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு  ஆஜராகாத சுதாகரனுக்கு எழும்பூர் கோர்ட் பிடிவாரன்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சுதாகரன் சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறைதண்டனை பெற்று சசிகலா மற்றும் இளவரசியுடன் சேர்ந்து  பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அடுத்த மாதம் 7ந்தேதி (ஜூன் 7) நடைபெறும் விசாரணைக்கு சுதாகரனை ஆஜர் படுத்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும், டிடிவிதினகரன் கைதானது குறித்த தகவலைஅரைமணி நேரத்தில் தெரிவிக்கவேண்டும் என்றம்,  டிடிவிமீதான அந்நியசெலாவணி முறைக்கேடு வழக்கில் அ மலாக்கப்பிரிவுக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.