1blueவடகொரியா:
டகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்தால் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
மது மற்றும் இணைய சேவைகளுக்கு தடை விதித்துள்ள வட கொரியா அடுத்த அதிரடியாக பொதுமக்கள் நீல நிற ஜீன்ஸ் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வட கொரியாவில் பொதுமக்கள் மது அருந்தவும் இணைய சேவைகளை பயன்படுத்தவும் அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் தடை விதித்துள்ளார். மட்டுமின்றி தொலைக்காட்சிகளில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பவும் அங்கு கட்டுப்பாடு உள்ளது.
இந்த நிலையில் கிம் ஜோங் விடுத்துள்ள அடுத்த அதிரடி உத்தரவு என்பது அங்குள்ள பொதுமக்கள் நீல நிற ஜீன்ஸ் அணிந்துகொள்ளவும், கடைகளில் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது.
வடகொரிய அதிபரின் அதிரடி அறிவிப்புகள் அனைத்தும் விவாத்திற்குள்ளாகி வருகிறது.