பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கே 13’.
இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், பெயரிடப்படாத இப்படத்தின் சில காட்சிகளை சென்னையில் எடுத்து முடித்துவிட்டு, ஊட்டியில் பிரதான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர். இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு.
கொரோனா ஊரடங்கிற்கு பின் வெளியிட திட்டமிட்டுள்ள இப்படம் இன்று (ஜூலை 21) அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளது படக்குழு.


‘டைரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங் மற்றும் இசையமைப்பாளராக யோஹன் பணிபுரிந்துள்ளனர். ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து வருகிறார்.