சென்னை:

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி அப்போலோ நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போலோவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையம் சட்டப்படி விசாரணையை தொடரலாம்  என்று தீர்ப்பு அளித்து உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு  தடை விதிக்க கோரி அப்பல்லோ தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே விசாரணை முடியப்பெற்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி  வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை  கடந்த பிப்ரவரி மாதம் 9ம் . சென்னை உயர்நீதி மன்றத்தில் திடீரென வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரிக்கப் பட்டு வந்தது. இன்றைய விசாரணையை தொடர்ந்து, வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில்,  ஆறுமுக சாமி ஆணையம் தொடர்பான அப்பலோவின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்,  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்கிற அப்பலோ கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்து உள்ளது.

மேலும்,  அப்பலோ மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரப்பட்டதை யும், தள்ளுபடி செய்த நீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படி உத்தரவிட்டது.

மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தின் 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டதால், ஆணையம் சட்டப்படி விசாரணையை தொடரலாம் என்று அறிவித்த நீதிமன்றம்,  ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை கோரிய அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.