திரைத்துறை பிரபலங்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பரவை முனியம்மா, சேது, வடிவேல் பாலாஜி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் அருண் அலக்ஸாண்டர் மாரடைப்பால் காலமானார். 48 வயதான இவர் டப்பிங் கலைஞராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.