டில்லி:

டல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பாஜக . மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி  கடந்த சில ஆண்டு களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், தொடர்ந்து  டயாலிசிஸ் செய்து வருகிறார். இதன் காரணமாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலிலும் போட்டியிட மறுத்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து, நேற்று இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கேள்விப்பட் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா போன்றோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளா அருண்ஜெட்லியை  தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்து உள்ளது.